டி-20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!

Date:

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

29 பேர் கொண்ட இந்தக் குழுவில் 17 வீரர்களும் 12 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த அதிகாரிகளில் தலைமைப் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர்கள், மேலாளர், வேகப் பயிற்சியாளர், சுழல் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை 03.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் இலங்கை அணி துபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு நேரடியாக விமானம் மூலம் செல்லவுள்ளது.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...