கோதுமை மாவின் விலை குறையுமா?

Date:

எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுமார் நூறு மா கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மா தொடர்பில் பாரிய பிரச்சினை இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்த நளின் பெர்னாண்டோ,

இந்த நாட்டில் மாவை உற்பத்தி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் டொலர் பற்றாக்குறையினால் போதியளவு கோதுமை தானியங்களை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இறக்குமதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாவின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...