கோதுமை மாவின் விலை குறையுமா?

Date:

எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுமார் நூறு மா கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மா தொடர்பில் பாரிய பிரச்சினை இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்த நளின் பெர்னாண்டோ,

இந்த நாட்டில் மாவை உற்பத்தி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் டொலர் பற்றாக்குறையினால் போதியளவு கோதுமை தானியங்களை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இறக்குமதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாவின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...