வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள்!

Date:

நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்தார்.

மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.

வாய் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அருகில் உள்ள அரச பல் சிகிச்சை நிறுவனத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

தற்போது மக்களிடையே பல் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது. இனிப்பு பண்டங்கள் உண்பது, குளிர்பானங்கள் குடிப்பதால் சிலருக்கு வாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் இவ்வாறான வாய்தொடர்பான நோய்களால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...