நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர்!

Date:

அரசாங்கம் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையான நடுத்தர வர்க்க மக்கள் தற்போது குறைந்த வருமானம் பெறுபவர்களாக மாறியுள்ளனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ளும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வருமான நிலைமையை உருவாக்குவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் தயாரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முன்னைய பொருளாதார நிலைமைகளை மக்கள் அடைய முடியவில்லை எனவும் மக்கள் தங்களின்பொருளாதார நிலைகளில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக அரசாங்கம் சிறந்த கொள்கையொன்றை வகுக்க வேண்டும் எனவும் இந்திரஜித் அபோன்சு மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...