மினுவாங்கொடை முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி தேவை!

Date:

கடந்த 6ஆம் திகதி மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

833214292V என்ற தேசிய அடையாள இலக்கம் கொண்ட ஜயகொடவைச் சேர்ந்த சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதி, இல. 10 இல் வசிக்கும் 39 வயதுடையவர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591608
உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591610
நிலைய கட்டளைத் தளபதி மினுவாங்கொடை – 0718591612

மினுவாங்கொட பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...