மினுவாங்கொடை முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவி தேவை!

Date:

கடந்த 6ஆம் திகதி மினுவாங்கொடை, கமன்கெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

833214292V என்ற தேசிய அடையாள இலக்கம் கொண்ட ஜயகொடவைச் சேர்ந்த சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதி, இல. 10 இல் வசிக்கும் 39 வயதுடையவர்.

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591608
உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா – 0718591610
நிலைய கட்டளைத் தளபதி மினுவாங்கொடை – 0718591612

மினுவாங்கொட பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...