இந்தியாவின் சர்ச்சைக்குரிய இருமல் மருந்துகளின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த உத்தரவு!

Date:

இந்தியாவின் சர்ச்சைக்குரிய இருமல் மருந்தின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து துறை குழுக்கள் இணைந்து நடத்திய விசாரணையில், மருந்து தயாரிப்பில் 12 குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக மாநில அரசு ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து காரணமாக காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததாக செய்திகள் வெளிவந்தபோது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில்,

“இந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...