சமூக வலைதளங்களில் வைரலான ஆசிரியர்களின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு!

Date:

அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெண் ஆசிரியர்கள் நடனமாடும் காணொளி தொடர்பான விசாரணைகள் குறித்து மேல்மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாடாகவே ஆசிரியையின் நடனம் தொடர்பான சம்பவம் வெளிவருவதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கதிரான கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...