கனியவள சேவையாளர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்!

Date:

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கனியவள உற்பத்திப் பொருட்கள் குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக இன்றைய தினம் எரிபொருள் விநியோக செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 6 மாதங்களாக கனிய வள சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எந்தவொரு ஊழியரோ அல்லது தொழிற்சங்கமோ அத்தியாவசிய விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் குறப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...