பொருளாதார சிக்கலால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

​​பாடசாலை ஆசிரியர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து சிரமம், பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை போன்ற காரணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைக்கு வரும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

பல தரப்புகளின் தகவல்களுடன் நாட்டின் தற்போதைய கல்வி நிலை குறித்து சமூகத்திற்கு தெரிவிக்க இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் பயன்படும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...