விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன: மகாவலி, களு, களனி ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும் உயர்வு!

Date:

நோட்டன் பிரிட்ஜ் நீர்மின் நிலைய நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது.

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் நிரம்பி வழியும் மட்டத்திற்கு மிக அருகில் உள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், விமலசுரேந்திர, கனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய நீர்மின் நிலையங்களில் நீர் மின் உற்பத்தி அதிகபட்ச கொள்ளளவில் மேற்கொள்ளப்படும் என மின் நிலைய பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தொடரும் மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மகாவலி, களு மற்றும் களனி ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் பல இடங்களில் அபாயகரமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி ஆற்றின் கிதுல்கல பிரதேசம், கெஹல்கமு ஓயாவின் நோர்வூட் பகுதி, களு ஆற்றின் கலவெல்லவ பிரதேசம், பேராதனை மற்றும் மகாவலி ஆற்றின் நாவலப்பிட்டி பிரதேசங்களில் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது.

கித்துல்கல பிரதேசத்தில் இருந்து களனி ஆற்றிலும் பேராதனை பிரதேசத்திலிருந்து மகாவலி ஆற்றிலும் நீர் மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...