‘வெளிநாடு செல்லும் தாய்மார்களின் பிள்ளைகள், 5 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்’

Date:

வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கை தாய்மார்களுக்கு தமது பிள்ளைகள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு சிறுவர் மற்றும் பெண்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி, வழங்கப்பட்ட அனுமதியை மீள மீளாய்வு செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சிறுவர் உரிமை அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள் வழங்கிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச வயதை 2 ஆண்டுகளாகக் குறைக்கவும், அதுவரை அத்தியாவசியமாக இருந்த குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்பிப்பதை இனி கட்டாயமாக்கக் கூடாது என்றும் ஜூன் 27ஆம் திகதி கூடிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவ வளர்ச்சியில் தாய் முக்கியப் பங்காற்றுவதால், முதல் 5 ஆண்டுகளில் குழந்தைகளின் உகந்த உடல் மற்றும் மன வளர்ச்சி மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்களுக்கு வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு வழங்குவது மற்றும் வெளிநாடு செல்லும் தாய்மார்கள் சமர்பிக்க வேண்டிய குடும்ப பின்னணி அறிக்கையை கட்டாயமாக்காதது குறித்த தீர்மானம் உடனடியாக திருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...