நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தில் திருத்தம்!

Date:

நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவுக்கான கட்டணம் 4,000 ரூபாவில் இருந்து 4,600 ரூபாவாகவும், பொது வரையறுக்கப்பட்ட நிறுவன பதிவுக்கான கட்டணம் 20,000 ரூபாவில் இருந்து 23,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து பதிவு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, சங்கப் பதிவுக் கட்டணங்களும் திருத்தப்பட்டு, 3,000 ரூபாவாக இருந்த சங்கப் பதிவுக் கட்டணம், 3,450 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...