நாட்டின் நிலைமைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

Date:

நாட்டின் பொருளாதாரம் உட்பட நாட்டின் நிலை குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த பிரேரணை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை விவாதம் நடைபெறும்.

அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை கேள்வி கேட்கும் அமர்வு நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (27) முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதேவேளை, வரிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தேகம சமித்த தேரர், டி.பி.ஏக்கநாயக்க, சந்திரகுமார விஜேகுணவர்தன, மற்றும் எஸ். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்னசிங்கம் அவர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி இரங்கல் விவாதம் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...