புத்தளத்தில் ஒழுக்கக் கேடுகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

Date:

புத்தளம் பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், திருட்டு போன்ற ஒழுக்க சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது.

இந் நிகழ்வு புத்தளம் பகுதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி, மற்றும் சமூக பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி அசோக தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இவ்வாறான ஒழுக்க சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடும் எடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ,புத்தளம் நகரபிதா முஹம்மது ரபீக், புத்தளம் நகர எல்லைக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள், இளைஞர் சமூகம், பிரதேச சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஜனாப் மற்றும் அப்துல் முஜீப் மௌலவி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...