கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

Date:

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.

அதற்கமைய, அரச அதிகாரிகளுக்கும் உரிய கடனாளிகளுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெறுவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு அதன் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இதன்படி, கடனளிப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைப்பதற்கான ஆதரவைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக முன்னதாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இன்று கூடி ஆராயவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...