கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாட்டால் கடுமையான பாதிப்பு!

Date:

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும், மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு காகித தாள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மருந்து விநியோகம் செய்ய பேப்பர் கவர்கள் இல்லை என்று மருத்துவமனையில் அறிவிப்பு பலகையில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை E.C.G ஐ சேகரிக்க போதுமான காகித நாடாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...