கராப்பிட்டிய வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாட்டால் கடுமையான பாதிப்பு!

Date:

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும், மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு காகித தாள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மருந்து விநியோகம் செய்ய பேப்பர் கவர்கள் இல்லை என்று மருத்துவமனையில் அறிவிப்பு பலகையில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை E.C.G ஐ சேகரிக்க போதுமான காகித நாடாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...