கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும், மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்கு காகித தாள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மருந்து விநியோகம் செய்ய பேப்பர் கவர்கள் இல்லை என்று மருத்துவமனையில் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை E.C.G ஐ சேகரிக்க போதுமான காகித நாடாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
சிகிச்சை பெற்று வரும் 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.