75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாவீரர் சிலைகளுக்கு அஞ்சலி!

Date:

எதிர்வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி 75ஆவது தேசிய தினத்தில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள தேசிய மாவீரர்களின் சிலைகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறு செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து இலங்கையின் தேசிய மாவீரர்களின் தகவல் பதிவேட்டை விரைவில் தயாரிக்குமாறும், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கி இந்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...