எங்களை மீண்டும் நாட்டு திருப்பி அனுப்ப வேண்டாம்: வியட்நாமில் உள்ள இலங்கை அகதிகள் !

Date:

வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நேற்று இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300இற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக நாட்டில் இருந்து வெளியேறினர்.

இதற்கிடையே 20 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட 306 பேர் படகு மூலம் கனடா நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பிலிப்பைன்சுக்கும், வியட்நாமுக்கு இடையே கடலில் சென்ற போது சூறாவளியில் படகு சிக்கி மூழ்கும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கையின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது.

இதையடுத்து சிங்கப்பூர் அதிகாரிகள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 317 இலங்கை அகதிகளை மீட்டு வியட்நாம் நாட்டுக்கு அழைத்து சென்றனர்.

கடலில் படகுகள் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். மீட்கப்பட்ட இலங்கை அகதிகள், வியட்நாமில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அகதிகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்று இலங்கை கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது.

எனவே எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...