ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் அதிகாரியை நாட்டிற்கு அழைக்க தீர்மானம்!

Date:

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் தொழிலுறவு பிரிவின் அதிகாரியை உடனடியாக நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலுக்காக ஓமானுக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தார் என மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை தொடர்ந்தே அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முதல் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சில விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...