பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றில்

Date:

அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) நாளை (14) பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்ட ஆவணமாகும்.

முன்னதாக, இந்த ஆண்டின் கடைசி நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்தார்.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் பொருளாதார பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களில் எழுபது வீதமான குடும்பங்கள் நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், இவ்வருட வரவு செலவு திட்டத்தில் அந்த மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் நாட்டின் பொருளாதார மீட்சிக்காக பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை உத்திகளுடன் தயாரிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் 2024 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தில் இருந்து விடுபட்டு வளமான நாட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் (15) ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்  தினம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இரட்டிப்பாக்க பாதுகாப்பு பிரதானிகள் தீர்மானித்துள்ளனர்.

இதன் கீழ் இன்று பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...