முட்டைகளை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Date:

முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், எனினும் சிலர் முட்டைக்கு தட்டுப்பாடு இருப்பதாக சித்தரிக்க முயல்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட முட்டை விலையை மேலும் அதிகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.

உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், அரசாங்கம் அறிவித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டையை விற்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...