ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்கும் ஷிஹானா ரஹீம்!

Date:

கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஷிஹானா ரஹீம் அவர்கள் சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்  அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

இதனை முன்னிட்டு BMGC Enviornment Teamஇனால் அவரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றினை அவர் கல்வி கற்ற அதே பாடசாலையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) இணைந்ததன் பின்னர் தான் கல்விகற்ற அதே பாடசாலையின் அதிபராக அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொறுப்பேற்று பாடசாலையின் தற்போதைய முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்த நிலையில் திருமதி ஷிஹானா ரஹீம் ஜித்தா சர்வதேச பாடசாலைக்கு அதிபராக செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...