தனுஷ்கவுக்கு ஊரடங்கு உத்தரவு!

Date:

அவுஸ்திரேலிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரது பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி சிட்னி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  மனுவை பரிசீலித்ததை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் அண்மையில் மறுத்திருந்தது.

11 நாட்கள் சிறையில்  இருந்த அவருக்கு டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பிறகு இன்று (நவம்பர் 17) அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

தினமும் ஈஸ்ட்வுட் பொலிஸில் ஆஜராகவும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவும், கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் அவர் பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் (  Tinder) டிண்டர் அல்லது வேறு எந்த டேட்டிங் பயன்பாட்டையும் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை, மேலும் சட்டப் பிரதிநிதி முன்னிலையில் மட்டுமே சமூக ஊடகத்தை அணுக முடியும்.

மேலும், புகார் தாரரை தொடர்பு கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவர் 200,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக (31) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...