தனுஷ்கவுக்கு ஊரடங்கு உத்தரவு!

Date:

அவுஸ்திரேலிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அவரது பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரி சிட்னி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட  மனுவை பரிசீலித்ததை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் அண்மையில் மறுத்திருந்தது.

11 நாட்கள் சிறையில்  இருந்த அவருக்கு டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பிறகு இன்று (நவம்பர் 17) அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

தினமும் ஈஸ்ட்வுட் பொலிஸில் ஆஜராகவும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவும், கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் அவர் பிணை நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல் (  Tinder) டிண்டர் அல்லது வேறு எந்த டேட்டிங் பயன்பாட்டையும் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை, மேலும் சட்டப் பிரதிநிதி முன்னிலையில் மட்டுமே சமூக ஊடகத்தை அணுக முடியும்.

மேலும், புகார் தாரரை தொடர்பு கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவர் 200,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக (31) அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...