ஈரானில் தொடரும் ஹிஜாப் போராட்டங்கள்: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

Date:

ஈரானின் தென்மேற்கு நகரமான இசே நகரில் உள்ள பஜாரில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர்.

அதேநேரம், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர் காயமடைந்தததாகவும் வெளிநாட்டு  செய்திகள் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் ஈரானில் நடைபெற்று வரும், நாடு தழுவிய போராட்டங்களுடன் தொடர்புடையதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளியாகின.

முன்னதாக நேற்று பிற்பகுதியில் இசே நகரின் பல்வேறு பகுதிகளில் கூறிய ஹிஜாபிற்கு எதிரான போராட்டக்காரர்கள் ஈரான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதேவேளை ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற காதி நீதிபதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ (All Ceylon YMMA Conference) பேரவையின் அனுசரணையுடன்,...

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- பங்களாதேஷ் பிரதமருக்கிடையில் விசேட சந்திப்பு: சுற்றுலா, மருந்து உற்பத்தித்துறை குறித்து பேச்சு.

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது...

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...