மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார் ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)  மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், நெடுகுடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நெடுகுடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன், காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அவதானித்ததுடன், அனல்மின் நிலைய பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...