சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இந்த வாரத்திற்குள் கிடைக்கப்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய குழு நியமனத்துடன், உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பான திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் சட்டமா அதிபர் தனது கருத்தை தெரிவிக்காததால், உரிய அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் திகதிகள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...