டுபாய், ஓமான் நாட்டுக்கு ஆள் கடத்தலில் ஈடுபட்ட பெண் சரணடைந்தார்!

Date:

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, 49 வயதுடைய பெண் ஒருவர்  மோசடியில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை சரணடைந்தார்.

குறித்த பெண் இன்று காலை சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரை சனிக்கிழமை  கைது செய்ததுடன், பிரதான சந்தேக நபரின் 45 வயதான உள்ளூர் முகவர் (தரகர்) ஒருவரும் அண்மையில் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழிலுக்குச் அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சில பெண்களும் ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில், 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...