நாட்டில் பழமையான 850 ரயில் பாலங்கள் சேதமடைந்துள்ளன!

Date:

நாட்டில் தற்போது சுமார் 850 ரயில் பாலங்கள் தற்போது சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாலங்களில் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்பெற்ற எல்ல- தேமோதர நீண்ட பாலமும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

1,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதையில் உள்ள 1,375 பாலங்களில் 850க்கும் மேற்பட்ட பாலங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது முழு ரயில் பால அமைப்பில் 50வீதமாகும் எனவும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான பாலங்கள் 100 ஆண்டுகள் பழமையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல 850 பழமையான பாலங்கள் உள்ளதால், மேலும் அழிந்துவிடாமல் இருக்க அந்தப் பாலங்களின் மீது ரயில்களை இயக்குவதில் மிகக் குறைந்த வேகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...