2022 சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான பொதுத் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று (நவ.27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இவ்வருட மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளில் ஒட்டுமொத்தமாக 74 வீதம் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கல்விப் பொதுத் தராதர விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இந்திய கடன் திட்டத்தின் கீழ் தனியார் துறையினரின் ஆதரவுடன் அதனை முறையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...