‘கொழும்பில் மற்றொரு பெரிய கொவிட் பரவல் அபாயம் இல்லை’

Date:

கொழும்பு நகரில் கொவிட் 19 இன் மற்றொரு பெரிய அலைக்கான ஆபத்து இல்லை என்று கொழும்பு மாநகர சபையின்  பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்திற்குள் தொற்றுநோய் மீண்டும் வருவதற்கான பெரிய ஆபத்து எதுவும் இல்லை, குறிப்பாக ஓமிக்ரான் தோன்றிய பின்னர், பெருந்தொகையான நகர மக்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்” என்று மருத்துவ அதிகாரி கூறினார்.

தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து (IDH) நிலைமை குறித்த புதுப்பிப்பை நான் பெற்றுள்ளேன், கடந்த சில நாட்களில் ஒவ்வொரு 50 வயதானவர்களில் ஒருவர் பொசிட்டிவ் இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்,ஆகையால் பெரிதான ஆபத்து ஒன்றுமில்லை

இருப்பினும், சுகாதார அமைச்சக வட்டாரங்களின்படி, கடந்த வாரம் சுமார் 150 தொற்றுநோய்  வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த, மட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனையின் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது என கூறியிருந்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...