ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

Date:

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது

சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...