பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்!

Date:

இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமான பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் புதிய முஸ்லிம் ஆண் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து தசாப்த காலமாக  கல்விப் பணியை முன்னெடுத்து வரும் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டச்சான்றிதழ் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2022 டிசம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீட வளாகத்தில் நடைபெறும்.

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

  • க.பொ.த (சா.த)பரீட்சையில் இஸ்லாம். கணிதம். தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அவற்றில் மூன்று பாடங்களிலாவது திறமைச் சித்திகளைப்
  • (C)பெற்றிருத்தல் 2005.01.31ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்
  • தேக ஆரோக்கியம் உடையவராக இருத்தல்.

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

1. நேர்முகப் பரீட்சை காலை 8.00மணிக்கு ஆரம்பமாகும்
2.எழுத்துப் பரீட்சை மதியம் 12.30 மணிக்கு ஆரம்பமாகும்
3.நேர்முகப் பரீட்சை இடம்பெறும் தினத்தில் விண்ணப்பப் படிவங்கள் வாயிற் காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு…

 

Popular

More like this
Related

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்...

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...