2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ‘9 A’ சித்தி பெற்ற மாணவன் ஒருவருக்கு தீ வைத்து எரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கண்டி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமையான ஒருவரால் தீ வைக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அம்பிட்டிய மீகனுவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, சனிக்கிழமை (26) இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிய போது சந்தேக நபரால் தீ வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குற்றப் பின்னணி கொண்டவர் என தெரியவந்துள்ளது.