4 மில்லியன் மக்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவப் பற்றாக்குறையினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் ஒரு மில்லியன் மக்கள், தடுக்கக்கூடிய கண் பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், காணப்படுகின்றனர்.

மேலும்  பத்தாயிரம் நோயாளிகள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நிலுவையில் உள்ளனர். புற்றுநோயாளிகள் தற்போது மருந்துப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு நாளாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்வதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...