4 மில்லியன் மக்கள் மருந்து மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவப் பற்றாக்குறையினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெறும் ஒரு மில்லியன் மக்கள், தடுக்கக்கூடிய கண் பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், காணப்படுகின்றனர்.

மேலும்  பத்தாயிரம் நோயாளிகள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நிலுவையில் உள்ளனர். புற்றுநோயாளிகள் தற்போது மருந்துப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு நாளாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்வதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...