‘இன பாகுபாட்டையும் இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்’

Date:

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரச சேவையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும், பொது மக்களுக்கு எதிரான எந்தவிதமான பாகுபாடுகளையும் தடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ நகரில் இடம்பெற்ற இனப் பாகுபாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ குளோபல் மன்றத்தின் அமைச்சர்கள் அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட பாரபட்சமான இனவாத அரசியல் கலாசாரம் மற்றும் மத நல்லிணக்கம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அங்கு விளக்கியுள்ளார்.

கொவிட்-19 தொற்று மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற பல தடைகளுக்கு மத்தியில் அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனம், மொழி, மதம், கலாசாரம் அல்லது பாலினம் என்ற பேதமின்றி அனைவருக்கும் சமத்துவத்தைப் பாதுகாக்க இந்நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது என்றும், அத்தகைய அடிப்படையில் எந்தவொரு நபருக்கும் ஏற்படும் அநீதிகளைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு வரம்பற்ற அதிகார வரம்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எந்தவொரு பாகுபாட்டையும் இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பெரிய மற்றும் பணக்கார நாடுகள் முன்மாதிரிகளை அமைத்து, தேவைப்படும் நாடுகளுக்கு உதவுவதன் மூலம் ஆற்றல்மிக்க பங்கை வகிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...