எதிரி நாட்டு திரைப்படங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வட கொரியா!

Date:

வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

உலகின் மிகவும் மர்ம தேசமாக இருக்கும் நாடு வடகொரியா தான். அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றியோ அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றியோ வெளி உலகத்திற்கும் எதுவும் நிச்சயமாக தெரியாது.

இந்நிலையில்வட கொரியாவில், கே-நாடகங்கள்(K-Dramas) என்று பிரபலமாக அறியப்பாடும் தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகம் செய்வது மரண தண்டனை விதிக்குமளவுக்கு பெரிய குற்றமாகும்.

அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் அடிக்கடி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் நாடு வட கொரியா.

குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு வட கொரியா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இந்த நிலையில், தென் கொரிய, அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக 2 சிறுவர்களுக்கு வட கொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது.

இப்படியிருக்க தற்போது வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் மாதம் வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் சந்தித்துக்கொண்ட 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பல தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதமே அந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஹைசனில் உள்ள ஒரு விமானநிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆனபிறகும் இப்போதுதான் அதுபற்றிய தகவல் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...