அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்!

Date:

ஏழெட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார அமைச்சர் முயற்சிப்பதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதிற்கு இடமளிக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை கேட்கும் மின் கட்டணத்தில் திருத்தம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் தற்போதைய தரவுகளின்படி மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

இது தொடர்பில் அவர் மேலும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வரை மூன்றாவது நபருக்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பளிக்காது.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...