FIFA WORLD CUP 2022: பிரேஸிலை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதிபெற்றது குரோஷியா!

Date:

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில் வென்றதன் மூலம் அரை இறுதிக்கு குரோஷியா தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எடியூகேசன் அரங்கில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு முன் உபாதை ஈடு நேரத்தின்போது அணித்தலைவர் நேய்மார் கோல் அடித்தார்.

எனினும், 117 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின்  புரூனோ பெட்கோவிச் அடித்த கோல் மூலம் கோல் எண்ணிக்கை சமப்படுத்தப்பட்டது.

இதனால் மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில் குரோஷியா 3:2 விகிதத்தில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் அடித்த கோல் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த பேலேயின் சாதனையை நெய்மார் சமப்படுதினார்.

பேலே 92 போட்களில் 77 கோல்களைப் அடித்தார். நெய்மார் 124 போட்டிகளில் 77 கோல்களை அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...