இலங்கை மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை தென்னிலங்கை மக்களும் ஆட்சியாளர்களும் தமது இதயங்களில் ஆழமாக பதிய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (10) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“சமீப காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஜனாஸா எரிப்பு போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
தென்னிலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினரால் நடத்தப்பட்ட பாரிய போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டபோது, முழு நாடும் கொதிப்படைந்தது.
அப்போது நாங்கள் அவர்களிடம் சொன்னோம், இன்றும் நான் அவர்களுக்குச் சொல்கிறேன், குறிப்பிட்ட நாளில் நீங்கள் பார்த்தது வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் பொதுவான நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.
மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இலங்கை மாறும் வரை, இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்றும், மனிதர்களுக்கு மதிப்பு இல்லை என்றால், அத்தகைய நாடு எப்படி ஜனநாயக வழியில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.