இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கவே நாட்டைக் கையகப்படுத்தினேன்: ஜனாதிபதி

Date:

நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட 306 C-2 லியோ கழகத்திற்கு 6,500 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும்  லியோ தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இன்றைய தினத்தைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்காமல் 25 வருடங்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...