கொழும்பு ‘லைட் ரயில்’ போக்குவரத்து திட்டம் மீண்டும் தொடங்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தில் நிறுத்தப்பட்ட ‘லைட் ரயில்’ எனப்படும் இலகுரக ரயில் போக்குவரத்து (LRT)  திட்டத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஜப்பானிய அரசாங்கம் இந்த திட்டத்தை மீண்டும் புத்துயிர் பெற தீர்மானித்தது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச கண்காணிப்பு நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இலகு ரயில் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி அறிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் 15.8 கிலோமீற்றர் நீளமான புகையிரதப் பகுதி முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்படுகிறது.

முழுமையாக இயங்கும் வலையமைப்பு தரையிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும்.

போக்குவரத்து மையம், தகவல் தொழில்நுட்ப பூங்கா, மாலபே, தலஹேன,   தேசிய வைத்தியசாலை, பொரளை, கோட்டா வீதி ராஜகிரிய, வெலிக்கடை, செத்சிறிபாய, பத்தரமுல்ல, பலந்துன, மற்றும் தலஹேன உள்ளிட்ட 16 நிலையங்கள் இதில் அடங்கும்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...