பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேனவுக்கு “சந்த தெக்கட சந்த” நூல் கையளிப்பு

Date:

பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான சமன் புஷ்ப லியனகேயின் மொழிப்பெயர்ப்பில், சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய  ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) என்ற நூலின் பிரதிகள், இன்று பத்தர முல்லையில் உள்ள இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் L.M.D .தர்மசேன மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் (முகாமைத்துவம்) அமித் ஜயசுந்தர ஆகியோருக்கு, பஹன மீடியா ஊடக அமைப்பின்  தலைவர்,செய்யத் சாலிம் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத அமைப்பின் இணைத் தலைவரும் கல்வி அமைச்சின் ஆலோசனை சபை உறுப்பினருமான கலாநிதி அஸ்ஸையத், ஹசன் மௌலானா அல்காதிரி, பஹன மீடியா ஊடக அமைப்பின்  பணிப்பாளர் அஷ்.அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் பற்றி மிக அழகிய முறையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்நூலின் சிங்கள மொழியிலான நூலின் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பில் வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...