பாடசாலை ஆசிரியர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்?

Date:

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக கூறி பண்டாரவளை புனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் பாடசாலைக்குள் வந்து தாக்குதலை நடத்தியதாக ஆசிரியர் கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக மோசமான வானிலை காரணமாக பாடசாலைக் கட்டடங்களை சீரமைக்க ஆசிரியர்கள் மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு வந்துள்ளனர்.

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தலைவருக்கும், குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான், ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செந்தில் தொண்டமான் மறைந்த  ஆறுமுகன் தொண்டமானின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். முன்னதாக 2015ஆம் ஆண்டு தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதற்காக அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 2014 ஆம் ஆண்டு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வாகனத்தை குறுக்கே சென்று இடையூறு செய்ததாக கூறப்படும் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...