2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

Date:

2021 ஆம் ஆண்டுக்கான அதிசிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்து வருடா வருடம் நடாத்திவரும் அதி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் வைபவம் கொழும்பு, கல்ஹிஸ்ஸையிலுள்ள மௌண்ட்லாவன்யா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் உட்பட லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின, தினமின ஊடகவியலாளர்கள் ஆறு பேருக்கு  விருதுகள் கிடைத்துள்ளன.

இதில் சிறந்த ஊடகவியலாளருக்கான மக்களின் பிரச்சனைகளை கட்டுரைகள் வடிவில் வெளிக்கொணர்ந்தமைக்காக மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் “சுப்பிரமணியம் செட்டியார்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் சிறந்த வணிக மற்றும் பொருளாதார பத்திரிகையாளர், மற்றும் சிறந்த பத்திரிகையாளர் விருதை வீரகேசரி பத்திரிகையின் ரொபட் சான் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், ஊடகத்துறையில் ஆற்றியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் துறைவாரியான ஏனைய விருதுகளும் ஊடகவியலாளர்களுக்கு இங்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஊடகத்துறையில் சிறப்பாக சேவையாற்றிய ஐவர் வாழ்நாள் சாதனையாளராக கௌரவிக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...