‘மின் கட்டணம் உயர்ந்தால் முறைப்பாடு இன்றி மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடும்’

Date:

இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் முறைப்பாடு இன்றி மக்கள் சார்பில் தலையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மின்சார அமைச்சும் இலங்கை மின்சார சபையும் கூறியது போன்று ஜனவரி மாதம் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் போது, ​​மக்களை மேலும் ஒடுக்குவதற்கு எந்த கட்சிக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...