நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி!

Date:

கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு சேர்ந்த  அப்துல் ராசிக் என்பவர் ஆலிமாக இருந்து முதன் முதலாக நீதிபதியாகின்றார்.
இவர் ஆரம்ப கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் பயின்றவர்.  இவரது தந்தை முஹம்மது மரணிக்க தாயார் ஆமினா இவரை மார்க்க கல்வி பயில அனுப்பி வைத்தார்.

குற்றியாடி சிறாஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் +2 உடன் 2005 முதல் 2012வரை மார்க்க கல்வி பயின்று சுரைஜி ஸனது பெற்றார்.

சிறாஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட கல்வித்தாகம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.ஏ.ஆங்கில இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ.ஆங்கில இலக்கியமும் தேறியவர் காரந்தூர் மர்க்கஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து ஸகாஃபி ஸனதுடன் எல்.எல்.பி முடித்த அப்துல் ராசிக் மீண்டும் திருப்பதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்.எல்.எம் தேர்ச்சி பெற்றார்.

தற்போது வடகரா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில் சமீபத்தில் கேரள மாநில அரசு நடத்திய முன்ஷிஃப் பதவிக்கான ஜுடிசியல் தேர்வு எழுதினார்.

இரண்டு தினங்களுக்கு முன் வெளியான தேர்வு முடிவுகளில் அப்துல் ராசிக் 28வது இடத்தில் தேர்ச்சி பெற்று நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி எனும் பெருமை பெறுகிறார்.

மார்க்க கல்வியுடன் உலகக்கல்வி இணைந்த பாடத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த கேரள முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டுகளுக்கு முந்தைய முயற்சிகள் தற்போது பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில் பயனளித்து வருகிறது மகிழ்ச்சியான செய்தி.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...