இலங்கையில் 5G வலையமைப்பு: வெளியான புதிய தகவல்!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இலங்கையில் 5ஜி (5G) வலையமைப்பை பயன்படுத்துவது குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகொம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசாவின் கருத்துப்படி, 5ஜி நெட்வொர்க்கை (வலைமைப்பை)பயன்படுத்துவதற்கு 4ஜி நெட்வொர்க்கை பயன்படுத்துவதற்கான செலவை விட இரண்டு மடங்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போது நாடு இருக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் 2ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டன. இந்தநிலையில் 5ஜி என்பது அடிப்படையில் 4ஜியின் மற்றொரு மேம்பட்ட பதிப்பாகும். இது நுகர்வோருக்கு அதிக திறனை வழங்குகிறது என்று திருக்குமார் நடராசா மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஸ்மார்ட்போன் ஊடுருவல் அரிதாகவே, அதாவது 50 சதவீதமாகவே உள்ளது. மக்கள் தொகையில் பாதி பேருக்கு 3ஜி போன் கூட இல்லை இந்த நேரத்தில் 5ஜி நெட்வொர்க்(வலையமைப்பு) பயனுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

5ஜி கைபேசிகள் மிகவும் வரையறுக்கப்பட்ட மற்றும் விலை உயர்ந்தவையாகவும் உள்ளன. எனவே, 5ஜி கைபேசி மற்றும் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய மக்களின் சதவீதமும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...

நன்கொடைகளை சரியான வழியில் செலுத்துங்கள்: அரசாங்கம் வேண்டுகோள்.

அனர்த்த முகாமைத்துவ மையம், மாவட்ட அனர்த்தக் குழுக்கள் மற்றும் பிராந்திய அனர்த்தக்...

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...