ருமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது!

Date:

ருமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் இரண்டு  லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலிருந்து 16 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது மற்றுமொரு  லொறியில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...