விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி!

Date:

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பெரும் போகத்தில் நெற்பயிர் செய்த 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும் போகத்தில் பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

குறித்த பணத்தை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 1 ஹெக்டேர் நெல் வயல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாயும், அதிகமாக உள்ள விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும் வரவு வைக்கப்படவுள்ளது..

இதனிடையே, பயிர்செய்கைக்காக அரசாங்கம் வழங்கும் உரங்கள் தரமானதாக இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...