2023 முதல் காலாண்டில் IMF ஒப்புதலை எதிர்பார்த்திருக்கிறோம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதிகள் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்த முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட வேண்டிய 2.9 மில்லியன் டொலர்களை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் நிதி மதிப்பிற்கு அப்பால் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பை 2.9 மில்லியன் டொலர்களாகக் காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் செயல்பாட்டை சில தரப்பினர் விமர்சிப்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த நபர்கள் எவரும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. இந்த செயல்முறையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடியையும் மக்களின் துன்பங்களையும் தமது அரசியலாக்கியவர்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நான்கு ஆண்டுகளில் 2.9 மில்லியன் டொலர்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அதில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை, சர்வதேச ரீதியில் நாம் பெறும் உறுதி மிகவும் முக்கியமானது. உலக வங்கி, JICA, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்கள் சாதாரணமாக செயல்பட முடியும். ஏனெனில் தற்போது நாம் அவசர உதவியாக மட்டுமே உதவி பெறுகிறோம். சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்துடன், நாங்கள் நிதிச் சந்தைக்கு திரும்ப முடியும், வங்கி அமைப்பு மீதான அழுத்தம் குறையும், பணவீக்கம் குறையத் தொடங்கும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், வங்கி வட்டி விகிதம் குறையும்.” எனத் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...